-->

மௌனிக்கும் சொற்கள் - ஆதிரை


அவளிடம் மௌனிக்கும் 

சொற்கள் எனப்படுவது


குரல் வளையை 

நெருக்கி விட்டு

கூவப் பணித்திடும்

கோமாளி உலகுகண்டு

குயில்களும் யாது செய்யும்?


உப்பிட்டக் கண்ணீர்பட்டு

உவர்ந்திட்ட உதடுகளில் 

உலர்ந்திட்ட வார்த்தைகள்

உரக்க எங்கனம் பேசும்?


ஒப்புக்குச் சம்மதங்கள்

ஒருமுறை கேட்டாலும்

ஒப்பாரி வைத்திடத்தான்

ஒருபொழுதும் வேண்டி

ஒதுங்கியது வார்த்தைகள்


ஊரோடு கலந்துப்பேசி

உறவுக்கு மணம்முடிக்க

ஒருமனது தீர்மானம்

உயர்த்திப் பிடித்தபின்னே


அவளிடம் மௌனிக்கும்

அரங்கேறாச் சொற்களும்


அகத்தோடு அனாதையாகி

அக்னியில் சாம்பலாகும்


கவிஞர்: சித்திரப்பாவை, சென்னை

Post a Comment

Previous Post Next Post