என்ன சொல்லி நான் பாட
எங்க அம்மா பேரழகை
ஆயிரம் குறும்பு இருக்குதப்பா
எந்த வகையில் நான் கூற
அழகை சொல்லி பாடவா
அறிவை சொல்லி பாடவா
குரும்பை சொல்லி பாடவா
குணத்தை சொல்லி பாடவா
என்ன சொல்லி நான் பாட
எங்க அம்மா பேரழகை
அம்மாவின் பேரழகை
சொன்னாலே பூ மலரும்
செந்தமிழில் பாடினாலும்
ஒருபாதி தான் தீரும்.
அம்மா பாடும் போது
வரிகள் சில பிழையாகும்
அப்போதும் தப்பெல்லாம்
வைரமுத்தை போய் சேரும்
எந்த வேலையும் பார்க்கமா
எட்டு மணிக்கு எந்திரிச்சு
சன் ரைஸ் பாஸ்ட்டாணு
சந்தேகமா கேப்பாங்க
என்ன சொல்லி நான் பாட
எங்க அம்மா பேரழகை
முத்தமிழை கரச்செடுத்து
புது கவிதை நா படைச்சா
காப்பி அடிச்ச கவிதையானு
கமெண்ட் அடிக்கும் பேச்சுக்காரி
ஆங்கிலத்தில் உள்ளது போல்
சின்ன தமிழ் பெரிய தமிழ்
அன்னை தமிழில் இல்லையென
பெருங்கவலை கொண்ட தங்கை
அளவுக்கு மீறாத
அம்மா குறும்புக்கு
அடியேன் ஓர் அடிமை
அவள் வாழ்க பல்லாண்டு
வெண்முத்தோட சிப்பிக்கு
சொந்தங்கள் எல்லாம்
மற்றோரின் சொத்தாக
அது மாறாத வரைதானே
நம் சொந்தம் அதுவல்ல
நமக்கென்றும் பிரிவல்ல
ஈரேழு ஜென்மங்கள்
என் தங்கை நீ தானே
வெண்ணிலவு நிறத்தழகி
வேதம் சொன்ன கருத்தழகி
நெடுங்காலம் மகிழ்வோடு
நீ வாழ வாழ்த்துகின்றேன்
தங்கையாக வந்தாலும்
பிள்ளை அன்பை தந்தாயே
என் தாயே நீ என் தாயே
சீரோடும் சிறப்போடும்
நெடுங்காலம் நீ வாழ்க
Superb Anna👏👏👏
ReplyDeletethanku madam
DeletePost a Comment